சூப்பர் ஸ்டார்.. தளபதி, விஜய் சேதுபதியால் நெகிழ்ந்துபோன ஷாருக்கான்..! வைரலாகும் பதிவு.!

2013-ம் ஆண்டு தனது முதல் படமான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் மெஹா ஹிட் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார்.

அதன் பின்னர் பாலிவுட்டில், அட்லி ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார். இந்த படத்தின் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் ஷாருக்கான், நயன்தாரா, ப்ரியாமணி ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

ரெட் சில்லீஸ் நிறுவனம் ஷாரூக்கானின் ‘ஜவான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். ஷாரூக்கானின் ஒரு கதாபாத்திரத்துடன் படம் முழுக்க வரும் வேடத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார். மற்றொரு கதாபாத்திரத்தில் ஷாருக்கான் ராணுவ அதிகாரி வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும், ஷாரூக்கானின் ‘ஜவான்’ படத்தில், விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையயே ரஜினி, விஜய் உள்ளிட்டோர் ‘ஜவான்’ படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாரூக்கான் ‘ஜவான்’ குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இந்த ஒரு மாதம் தனது படக்குழுவினருக்கு அருமையான 30 நாள் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஷாருக்கன் இப்படம் குறித்து உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார். இதில், தலைவர் ரஜினிகாந்த் தங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசிர்வதித்ததும், அணிருத்துடன் பார்ட்டியும், நயன்தாராவுடன் படம் பார்த்ததும், தளபதி மற்றும் விஜய் சேதுபதியுடன் ஆழமான உரையாடல், அட்லியும், பிரியாவும் அருமையான உணவை கொடுத்து உபசரித்தது என அனைத்துமே சிறப்பாக அமைந்ததாகவும் அவர்களுக்கு நன்றியை ஷாருக்கன் தெரிவித்துள்ளார்.

இப்போது சிக்கன் 65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.