ரியல் ஜோடியாக ஆகவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் இன்னும் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் ஆக பேசப்படும் ஆன் ஸ்கீரின் ஜோடி என்றால் அது நயன்தாரா – சிம்பு தான். வல்லவன் படத்தில் இணைந்து நடித்தது முதலே இவர்களைப் பற்றி பல கிசுகிசுக்கள் வேகமாக பரவி வந்தன.
அதை நிரூபிக்கும் வகையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களுடன், இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. அதை உண்மை என்கிற விதத்தில் பல மேடைகள் மற்றும் பேட்டிகளில் மறைமுகமாக சிம்பு பேசியிருந்தார். அப்படி வல்லவன் படத்திற்கு பிறகு, மீண்டும் சிம்புவும் நயனும் இணைந்த திரைப்படம் ‘இது நம்ம ஆளு’.
பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இத்திரைப்படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான பி.எல்.தேனப்பன் ஒரு பேட்டியில் இவர்கள் ஷூட்டிங்கில் செய்த காரியம் குறித்து நீண்ட நாள் ரகசியத்தை கூறியுள்ளார். இது நம்ம ஆளு படப்பிடிப்பின் போது நயன்தாரா சில சேட்டைகளை செய்வாராம்.
பொதுவாக பி.எல்.தேனப்பன் தனது போனை யாரிடமும் கொடுக்க மாட்டாராம். ஆனால் நயன்தாரா மிகவும் நெருக்கமானவர் என்பதால் ஒரு நாள் இரவு நயன்தாரா அவரது போனை வாங்கியிருக்கிறார். அவரும் எதார்த்தமாக போனை கொடுத்திருக்கிறார். அப்போது, நயனும் சிம்புவும் அந்த போனில் இருந்து நடிகை கோபிகாவுக்கு ‘ஐ லவ் யூ’ என மெசேஜ் செய்துள்ளனர்.
அந்த குறுஞ்செய்தியை பின்னர் அழித்தும் விட்டனர். மறு நாள் கோபிகா பி.எல்.தேனப்பனிடம் ‘ஏன் சார் அப்படி ஒரு மெசேஜ் அனுப்புனீங்க?’ என கேட்டுள்ளார். அதற்கு அவர் சத்தியமாக நான் இல்லை என்று சொல்லிவிட்டு யோசிக்கவே, அப்போது தான் சிம்புவும் நயனும் சேர்ந்து தன் போனில் இப்படி ஒரு காரியத்தை செய்ததை தெரிந்து கொண்டாராம். நயன் அடிக்கடி இந்த மாதிரி சேட்டைகள் எல்லாம் செய்வார் எனவும் பி.எல்.தேனப்பன் கூறியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.