நடிகர் சிம்பு, தற்போது பத்து தல, கொரோனா குமார் மற்றும் வெந்து தணிந்தது காடு படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, சிம்புவின் வாலு படத்திற்கு பிறகு, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் படம் எடுக்க இருந்த நிலையி;ல், சிம்புவின் உடல் எடை கூடி நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார் என தகவல் பரவியது. மேலும் அவர் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் ஏஜிஎஸ் நிறுவனம் அப்போது இருக்கும் சிம்புவை வைத்து படம் தயாரிக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றது. இதனால் சிம்புவிற்கு அடுத்து அடுத்து படங்களில் நடிக்க ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதனிடையே, சிம்புவிடம் ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குனர் கூறியுள்ள கதை சிம்புவிற்கு பிடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் சிம்புவுடன் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து உள்ளதால், கூடிய விரைவில் சிம்புவின் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரு புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளிவர உள்ளதால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.