தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார். ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார்.
மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார். அதன் பின்னர், ரஜினி, கமல், அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான கிசுகிசுகளும், சர்ச்சைகளும் வந்த வண்ணம் உள்ளது. அதையும் தாண்டி அவர் தொடர்ந்து பெரிய நடிகர் என்ற அந்தஸ்தில் தான் இருந்து வருகிறார். வடிவேலு உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் உடன் நடித்திருந்தார்.
மேலும் படிக்க: ரீலா… ரியலா?.. நடு ரோட்டில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த நிவேதா பெத்துராஜ்.. வெளியான உண்மை..!
சமீப காலமாக நடிகர் வடிவேலுவுடன் நடித்த துணை நடிகர்கள் நேர்காணலில் பங்கேற்று வடிவேலு குறித்த சில விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், அவருடன் பல படங்களின் நடித்த சிங்கமுத்து வடிவேலு குறித்து கூறுகையில், திரைத்துறையில் எல்லோருக்கும் தெரிகிறதை விட என்னை விட வடிவேலுவை தெரிந்தவன் யாரு, நான் அவரை பத்தி கால்வாசி கூட சொல்லலியே இன்னும் சொன்னா துபாய் போன்ற நாடுகளாக இருந்தால், கல் எடுத்து அடிச்சு கொன்றுவாங்க, அப்படி எல்லாம் அவர் தப்பு பண்ணுவாரு வடிவேலு ஆரம்பத்தில் பண்ண கூத்தெல்லாம், எனக்கு மட்டும்தான் தெரியும். உலகத்திலேயே, எல்லா நடிகரும் கெட்டுப் போய்டனும் தான் மட்டும் நடிக்கணும் அப்படிங்கற நினைப்பு வடிவேலுவுக்கு இருக்கு, வடிவேலு, பொய் சொல்லி ஒரு ஆளைப்பற்றி வதந்தியை கிளப்பி விட்டுருவார் என்று சிங்கமுத்து வடிவேலு குறித்த விளாசியுள்ளார். மேலும், வடிவேலுக்கு நாக்குல சனி என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.