சினிமா / TV

அண்ணா பல்கலை,, மாணவி விவகாரம்.. நடிகர் சிவகார்த்திகேயன் கூறிய ‘நச்’ பதில்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை வழிபட்டு செல்வது வழக்கம். இதில் முக்கிய அரசியல் பிரபலங்களும், மற்றும் திரையுலக பிரபலங்களும் வருகை தந்து முருகனை வழிபட்டு செல்வர்.

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். பேட்டரி காரில் வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயன் வருவதை கண்டு, வரிசையில் தரிசனத்திற்காக நின்று கொண்டிருந்த ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் ஹே… சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன்.. என்று கத்தி கூச்சலிட்டனர்.

அப்போது பேட்டரி காரில் இருந்து முருகன் கோயில் முன்பு சிவகார்த்திகேயன் அங்குள்ள பக்தர்களையும் தனது ரசிகர்களையும் கண்டு மகிழ்ச்சியுடன் கை அசைத்தப் படி கோவிலுக்குள் சென்றார்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் மூலவரான முருகனை வழிப்பட்ட பின்னர் கோவில் உட்பிராகாரதில்லுள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளிட்ட சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்கினார்.

தொடர்ந்து, தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த சிவகார்த்திகேயனிடம் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது கோவில் வாசல் முன்பு நின்று கொண்டிருந்த குழந்தைகளிடமும் உற்சாகத்துடன் கைக்குலுக்கி மகிழ்ந்தார்.

தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பலரும் திடீரென்று கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக வருகை தந்த சிவகார்த்திகேயனைக் கண்டு மனமகிழ்ந்து மீண்டும் பக்தர்கள் அதே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், நீண்ட நாட்களாக முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்து கொண்டுருந்தேன். கடந்த மாதம் வர நினைத்தேன். ஆனால் மழை வெள்ளத்தால் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையும் படியுங்க : இட்லி கடை நடத்தும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் வருகை தந்து முருகனை தரிசனம் செய்துள்ளேன். அமரன் படக்கதை வெற்றி அடைய செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் குறித்து கேட்டபோது, அதை பற்றி இங்கு பேசவேண்டாம் என முதலில் கூறிய நடிகர் சிவகார்த்திகேயன் அதன்பின் பேசுகையில் இதுபோல் சம்பவம் நடக்க கூடாது என்பது தான் அனைவரின் நினைப்பும். இதற்கு காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் தான் நாம் நிற்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்கு பெண்களுக்கு தைரியம் வர வேண்டும். இதுபோல் இனி நடக்காது என வேண்டுவோம். அதை தான் நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.