சினிமா / TV

சட்டமன்ற தேர்தலில் நடிகர் சூர்யா..? எங்களுடைய நோக்கமே இதுதான் : பரபரப்பு அறிக்கை!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் சூர்யா களமிறங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது மற்றும் உண்மைக்கு மாறானது என சூர்யா நற்பணி இயக்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய செய்திகள் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு எதிரானவை என்றும், அவரது கவனம் சினிமா மற்றும் அகரம் அறக்கட்டளைப் பணிகளில் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சூர்யா நற்பணி இயக்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“ஊடக நண்பர்களுக்கும், சமூக வலைதள நண்பர்கள், சகோதர-சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் சார்பில் வணக்கங்கள். கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா அவர்கள் குறித்து சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா களமிறங்க உள்ளதாக சமூக வலைதளங்களை மையமாகக் கொண்டு பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது மற்றும் பொய்யானது என்பது மட்டுமல்ல, அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.

அவரது கலை உலகப் பயணமும், அகரம் அறக்கட்டளையும் தற்போது அவருக்கு முழு நிறைவை அளித்துள்ளன. சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு, தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் கவனம் ஈர்த்ததற்கு காரணமான உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி-தங்கைகள், நண்பர்களின் ஆதரவுடன், அவரது கவனம் சினிமாவில் மட்டுமே இருக்கும். அண்ணன் சூர்யா குறித்து பரவிய இந்த பொய்யான செய்தியை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி!” இந்த அறிக்கையின் மூலம், சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.