விபத்தில் சிக்கிய சூர்யா…. தலையில் பலமான அடி – ஷூட்டிக் நிறுத்தம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து அதன் பிறகு பெரிதாக எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இதை அடித்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் .

இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது.அதையடுத்து சுதா கொங்குரா இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட புறநானுறு திரைப்படம் கைவிடப்பட்ட நிலையில் பாலாவின் இயக்கத்தில் உருவாக இருந்த வணங்கான் திரைப்படத்திலிருந்தும் சூர்யா அதிரடியாக விலகிவிட்டார். இதை அடுத்து நடிகர் சூர்யா தற்போது 44-வது திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் .

இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மாலத்தீவு பகுதியில் நடைபெற்றது. இதற்கிடையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது. பின்னர் மாலத்தீவில் படப்பிடிப்பை முடித்த பட குழு கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் ஊட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள்.

இப்படத்திற்கான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செய்ய அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார் என்றும் வெளிவரும் செய்திகள் கூறுகிறது. மேலும் சூர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஷூட்டிங்கிலிருந்து சில நாட்கள் நிச்சயம் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.