தமிழ் சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக தனது சிறந்த படைப்புக்களை சினிமாவுலகில் விட்டு சென்றவர் கே.வி.ஆனந்த். ஆரம்ப காலத்தில் கல்கி, இந்தியா டுடே போன்ற பல்வேறு பத்திரிகைகளில் புகைப்பட பத்திரிகையாளராக வேலை செய்தவர். பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் பிரபல ஒளிப்பதிவாளரான பி. சி. ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
மலையாள படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதும் அப்படம் பெற்றுத் தந்தது. மேலும், கே.வி.ஆனந்த் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். அதிலும், குறிப்பாக ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படங்களான முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களுக்கு கே வி ஆனந்த் தான் ஒளிப்பதிவு செய்தார் என்பது குறிபிடத்தக்கது.
ஒளிப்பதிவாளராக இருந்த கே வி ஆனந்த், தமிழ் சினிமாவில் முதன் முதலில் 2005ம் ஆண்டு கனா கண்டேன் என்னும் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பின்னர், அயன், கோ, மாற்றான், அனேகன், காப்பான் போன்ற பல்வேறு ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். இதனையடுத்து, அடுத்த படம் குறித்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த கே வி ஆனந்த், எதிர்பாராத விதமாக காலமானார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இப்படி ஒரு நிலையில் இவருடைய மகளுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்று இருக்கிறது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜா அண்ணாமலை மண்டபத்தில் கே.வி.ஆனந்த் மகள் திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மேலும், இந்த திருமணத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ஜீவா உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஆனால், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஹிட் படங்களில் நடித்த நடிகர் சூர்யா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, சூர்யாவை வைத்து காப்பான், அயன் மாற்றான் போன்ற மூன்று படங்களை கே வி ஆனந்த் இயக்கியிருந்தார். ஆனால், சூர்யா திருமணத்திற்கு ஏன் வரவில்லை என்று ரசிகர்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சோசியல் மீடியாவில் வருத்தத்துடன் ரசிகர்கள் இது குறித்து பதிவிட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தமிழ் சினிமாவில் புகழ்மிக்கவர்கள் உயிரோடு இருக்கும் வரைதான் அவர்களுக்குன்டான மரியாதை நட்பு அன்பு எல்லாம் கிடைக்கும்.. அந்த புகழ்மிக்கவர்கள் இறந்தவுடன் ஒரு சில நன்றியுள்ளவர்களை தவிர அனைவரும் அவர்களை மறந்துவிடுவார்கள். இதுதான் சினிமா டிசைன்… அந்த வகையில் மறைந்த இயக்குநர் ஒளிப்பதிவாளர் திரு KV ஆனந்த் அவர்களின் மகள் திருமண வரவேற்பு விழா இன்று நடந்தது.
KV ஆனந்த் சார் இயக்கத்தில் நடித்த பல ஹிரோக்கள் வரவில்லை. ஆனால், விஜய்சேதுபதி தனது பிஸியான கால்ஷீட்களிலும் நேரத்தை ஓதுக்கி இந்த விழாவிற்கு வந்து மணமக்களை ஓதுக்கி இந்த நன்றி மறவாத குணம்தான் சேதுவின் தனித்துவம். நல்ல மனம் வாழ்க.” என ஜெயம் எஸ்.கே. கோபி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.