வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில், அப்படத்தில் முக்கிய பங்காற்றிய பிரபலம் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. நடிகர் அஜித்தின் துணிவு படத்துடன் வாரிசு மோதுவதால், இரு ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் பொங்கல் பண்டிகை.
இந்த நிலையில், வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில், அப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றிய சுனில் பாபு திடீரென உயிரிழந்திருப்பது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிரபல கலை இயக்குநரான சாபு சிரிலியிடம் உதவி புரொடக்ஷன் டிசைனராக பயணத்தை தொடங்கிய இவர், மலையாளத்தில் பல படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிருக்கிறார்.
அனந்த பத்ரம், பெங்களூரூ டேஸ், காயம்குளம் கொச்சுன்னி, பழசிராஜா, உருமி, சோட்டா மும்பை, பிரேமம், நோட்புக், ஆமி ஆகிய படங்களிலும் வேலை செய்துள்ளார்.
அனந்த பத்ரம் படத்திற்காக சிறந்த கலை இயக்குநர் என்ற கேரள மாநில விருதை பெற்ற சுனில், இந்தியில் எம்எஸ் தோனி, கஜினி, லக்ஷயா, ஸ்பெஷல் 26 உள்ளிட்ட பங்களிலும் பணியாற்றியுள்ளார்.
பொங்கலுக்கு வாரிசு வெளியாக உள்ள நிலையில், காலில் வீக்கம் ஏற்பட்டதன் காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சுனில் பாபுவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ந்து போன நடிகர் துல்கர் சல்மான், சுனில் பாபுவின் புகைப்படத்தை பகிர்ந்து இதயம் கணக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.