ரஜினி வீட்டு தரையில் அமர்ந்து தர்ணா செய்த விஜயகாந்த்.. “விஜி, விஜி”ன்னு பதறிய சூப்பர் ஸ்டார்..!

80 மற்றும் 90 களில் நடிகர் விஜயகாந்த் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர். நடிகர் விஜயகாந்த் 1978 முதல் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.

இதனிடையே, இவரின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் வெளிவந்து இவருக்கு வெற்றியை பெற்று வசூலை ஈட்டி கொடுத்தது. மேலும், இந்த படத்தின் மூலம் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியை பெற்று கொடுத்தது.

நடிகர் விஜயகாந்த் சங்கத்தின் தலைவராக இருந்த போது கடனை அடைக்க பல திட்டங்களை வகுத்தும், பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று. வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது அதில் முக்கியமான திட்டம்.

நடிகர் சங்கம் பல வருடங்களாகவே வங்கியில் வாங்கி கடனை கட்ட முடியாமல் விழி பிதுங்கியிருந்தது. அனைத்து பிரபலங்களும் நடிகர் சங்கத்தை கைவிட்ட நிலையில், என்ன செய்வது என்று அப்போதைய நடிகர் சங்க தலைவர் ராதாரவி.

நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த்தை கடந்த 2000 ஆம் ஆண்டு அமர வைத்து பொறுப்பையும் தந்துள்ளார் ராதாரவி. இதனை அடுத்து நடிகர் சங்க தலைவராக வந்த விஜயகாந்த் உடனடியாக கடனை அடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, ஒவ்வொரு நடிகர்களையும் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். அந்த சமயத்தில் தான் ரஜினி வீட்டுக்குள் நேராக போய் அங்கு தரையில் அமர்ந்து விஜயகாந்த் தர்ணா செய்து உள்ளார்.

உடனே மனம் நெகிழ்ந்த ரஜினிகாந்த்தும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படி தான் ஒவ்வொரு முயற்சிகளையும் எடுத்து, கலை நிகழ்ச்சிகளை நடித்தி நடிகர் சங்க கடனையும் விஜயகாந்த் அடைத்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல், சங்கத்திற்கான வைப்பு தொகையையும் சேர்த்து வைத்து, பிறகு விஜயகாந்த் திடீரென கட்சியை ஆரம்பித்த நிலையில், அரசியலில் இருந்து கொண்டு நடிகர் சங்க தலைவராக செயல்படுவது சரி வராது என்பதால தானாகவே முன்வந்து அந்த பொறுப்பில் இருந்து நடிகர் விஜயகாந்த் விலகியுள்ளார்.

இதற்கு பிறகு நடந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாக நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, அதில் தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார்.

ஈரமனசு விஜயகாந்த் எனினும் வெறும் பாராட்டு விழாவுடன் முடித்துவிடக்கூடாது, இந்த நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்று, பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் தன்பங்குக்கு கோரிக்கையும் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

4 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

5 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

5 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

6 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

7 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

7 hours ago

This website uses cookies.