கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு திரைப்பட விழாவில் நடிகை சாய் தன்ஷிகாவும் விஷாலும் தங்களின் காதலை அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே விஷால் நடிகர் சங்க கட்டிடம் திறந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறும் எனவும் அன்றைய நாளில் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சொன்ன தேதியில் திருமணம் நடைபெறுமா? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு விஷாலிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது “ஆகஸ்ட் 29 நல்ல செய்தி வரும்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 29 ஆன இன்று விஷால்-சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்த விழா நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள விஷாலின் இல்லத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் கட்டட திறப்பு விழா தேதி தள்ளிப்போயுள்ளதாகவும் செய்திகள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.