எல்லா இடத்திலும் தண்ணீர். கேவலமா இருக்கு.. எதுக்கு வரி கட்டுகிறோம் என கேட்க வைத்து விடாதீர்கள் : திமுக அரசு மீது நடிகர் விஷால் காட்டம்!
சென்னையில் கனமழை கொட்டி வரும் நிலையில்,வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாகவே காட்சியளிக்கிறது. இந்த நிலையில சென்னை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், சென்னை மாநகராட்சிக்கும் மேயர் பிரியாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், புயல் மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்ழுடும், பின்னர் தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதே போல அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது.
அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களை யோசித்து பாருங்கள். 2015ஆம் ஆண்டு நடக்கும் போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம், முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம். 8 வருடம் கழித்து அதைவிட மோசமாக நடப்பது கேள்விக்குறியாக உள்ளது.
மழைநீர் சேமிப்பு வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது என்பது தெரியவில்லை,. நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதை கேட்டுக் கொள்கிறேன்,.சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
என் வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்கள், என் அம்மா அப்பா அச்சத்தில் உள்ளனர். எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான கேவலமான விஷயமாக பார்க்கிறேன்,. உடனடியாக இதை சரி செய்ய மாநகரட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள் வந்து உதவுங்கள் என காட்டமாக பேசியுள்ளார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.