ரஜினி, கமலுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களுக்கு போட்டியாக ஒரு நடிகர் இருந்துள்ளார் என்பதை அனைவராலும் நம்பமுடியாத உண்மை. அவருடைய போதாத காலம் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்த்க்கது.
இல்லையென்றால் தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் இடங்களில் கண்டிப்பாக அவரும் ஒரு நடிகர் இடம்பெற்றிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த காலகட்டத்தில் இவரைப் பார்த்து ரஜினி, கமல் போன்ற நடிகர்களே பயந்து நடுங்குவார்களாம். அந்த நடிகரின் படத்திற்கு போட்டியாக இவர்களது படம் வெளியிட்டால் கண்டிப்பாக தோல்வி நிச்சயம் தான்.
அந்த அளவுக்கு அவரின் ரசிகர்களின் பேர் ஆதரவை நடிகர் பெற்று இருந்தார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை ராமராஜன் தான். இவரது நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, காவல்காரன் போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து பட்டிதொட்டி எங்கும் இவரது பாடல்கள் பட்டையை கிளப்பியது. ரஜினி, கமல் போன்ற நடிகர்களை ஒப்பிடும்போது இவரது படங்கள் தான் அந்த காலத்தில் அதிக ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி அப்போது நடிகர் ராமராஜனுக்கு தமிழ் சினிமாவில் அதிக மவுசு இருந்த நிலையில், அந்த காரணத்தினால் ஒரு துண்டு சீட்டில் ராமராஜன் இந்த இயக்குனர் படத்தில் நடிப்பதாக கால்ஷீட் தேதியை எழுதி கொடுத்து கையெழுத்து போட்டால் மட்டுமே போதுமாம். தயாரிப்பாளர்கள் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் போட்டு படத்தை எடுக்க தயாராக இருந்தார்களாம்.
அதேபோல் நடிகர் ராமராஜன் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாரிடம் பணம் கேட்டாலும் அவர்கள் கொடுக்கவும் தயாராக இருந்தார்களாம். ஏனென்றால் அந்த காலத்தில் ராமராஜனின் படங்கள் 100% உறுதி என சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் முழுமையாக நம்பப்பட்டது.
இதனிடையே, தனது மனைவி நளினியை விவாகரத்து பெற்று நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நடிகர் ராமராஜன் அதன் பின்பு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். பின்னர் ராமராஜன் இப்போது மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.