சின்னத்திரையில் நுழைந்த சில காலங்களிலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன இவர் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.
பிரவீன் பென்னட் இயக்கிய ராஜா ராணி தொடரில் சஞ்சீவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தனது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆல்யா தனது காதலன் சஞ்சீவை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். அண்மையில் தான் இரண்டாவது மகன் பிறந்தார், குழந்தை பிறந்ததற்கு பிறகு ஆல்யா மானசாவின் உடல் எடையும் அதிகரித்தது. முன்னதாக, புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கும் ஆல்யா 2 மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்து ஆச்சரியப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், ஆல்யா இனியா சீரியலிலும், நடிகர் சஞ்சீவ் கயல் என்ற தொடரிலும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு தொடர்களும் சன்டிவியில் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆல்யா விவாகரத்து செய்தி வரும் போதெல்லாம், நாங்கள் சிரித்துக் கொண்டுதான் இருப்போம். பெரிதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்கப் போவது இல்லை. அதேபோல், கூடவே இருந்து சிலர் ஏமாற்றுவதை பார்த்து ஆரம்பத்தில் கோபப்பட்டு இருந்தேன். பழிவாங்க வேண்டும் என்றெல்லாம் ஆரம்பத்தில் நினைப்பேன் இப்போது அந்த சிந்தனை இல்லை என பேசி இருந்தார்.
இந்நிலையில், ஆல்யா எம்எல்எம் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறி நிறுவனத்தில் இருப்பவர்கள் மற்ற பிரபலங்களுக்கு போன் செய்து அணுகியுள்ளனர். இதனால், இது குறித்து நிறுவனம் பற்றி தெரியாத ஆலியா மானசா ஐயோ அது நான் இல்லை. நாங்கள் எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யவில்லை. இதை நம்ப வேண்டாம் என தன்னை கேட்டவர்களை உஷார் படுத்தியுள்ளார். மேலும், தனது கணவர் சஞ்சீவுடன் இணைந்து பேசிய ஆல்யா தனது பெயரை வைத்து மோசடி நடப்பதாக புகார் அளித்துள்ளார்.
மேலும், வீடு, கார், பைக் என எல்லாமே இஎம்ஐ மூலம் தான் வாங்கி இருப்பதாகவும், இப்போதும் இஎம்ஐ கட்டிக் கொண்டிருப்பதாகவும், எங்கள் நடிப்பில் கிடைக்கும் சொந்தப்பணத்தில் தான் வாழ்க்கையை நடத்துகிறோம். நாங்கள் எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யவில்லை என இருவரும் விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.