எச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இப்படத்திற்கு பிறகு ராட்சசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். பிறகு, அசுரன், யானை உள்ளிட்ட திரைபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இவருக்கென்று தனி இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டமே உண்டாகி உள்ளது என்றே கூறலாம்.
அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படமான ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், கண்ணகி, நிறங்கள் மூன்று, பெண்டுலம் உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அம்மு அபிராமி, சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என கேள்வி கேட்டதற்கு, அதற்கு பதில் அளித்த அம்மு அபிராமி “எனக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆசை. அந்த மாதிரி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நாம் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்களை சிரிக்க வைக்கும்படி அல்லது சமூகத்திற்கு நல்ல கருத்து சொல்லி பேசும் பொருளான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும்” என்று நடிகை அம்மு அபிராமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.