சின்னத்திரை தொகுப்பாளினிகளின் லிஸ்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன். பைரவி சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு புகழ்பெற்றவர் நடிகை அம்மு. இவர் தனது திரைபயணத்தை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி, அதன்பின் டப்பிங் ஆர்டிஸ்ட் என முன்னேறி சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அம்மு ராமச்சந்திரன் கல்யாணம் குறித்து பேசியுள்ளார். அதில், அவர் கல்யாணம் இருமனம் இணைந்து நடக்கக்கூடிய இந்த பந்தத்தை நமது முன்னோர்கள் ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறுவார்கள்.
இதில், ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கே தெரியும். தற்போதைய காலகட்டத்தில், பெற்றோர்களால் பார்த்து நிச்சயக்கப்பட்ட கல்யாணங்களும், காதல் கல்யாணமும் அதிக அளவில் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. அதற்கு காரணம், கல்யாணத்தின் புனிதத்தை உணராமல் அவர்களுக்குள் ஏற்படும் ஈகோ வாலும் விட்டுக் கொடுக்க முடியாத தன்மையாலும் சீக்கிரமே இருவரும் பிரிந்து விடுவார்கள்.
அதுவும் கட்டாயத்தின் பெயரில் ஒருவரை கல்யாணம் செய்துவிட்டு மூன்று மாதத்தில் தாலியை கழட்டி வைத்துவிட்டு, இன்னொருவருடன் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வது என்னுடைய பாலிசி கிடையாது என்று அம்மு ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.