கேரக்டரை தவறாக பேசிய நபர்; “செருப்பால் அடிப்பேன்” என பதிவிட்ட புஷ்பா பட நடிகை..!

Author: Vignesh
18 February 2023, 12:30 pm
pushpa-updatenews360
Quick Share

தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்.

anasuya bharadwaj-updatenews360

அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

anasuya bharadwaj-updatenews360

இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனசுயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்துள்ள அவர், அப்படி எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக கவர்ச்சி காட்டுவது வழக்கம்.

anasuya bharadwaj-updatenews360

அந்தவகையில், தனது புகைப்படங்களை அனசுயா பரத்வாஜ் சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தநிலையில், நெட்டிசன் ஒருவர், “அனசுயா பரத்வாஜை பணத்துக்காக மட்டும்தான் திருமணம் செய்துகொண்டார்” என பதிவு செய்திருந்தார்.

anasuya bharadwaj-updatenews360

அந்த பதிவை பார்த்து கோபமடைந்த அனசுயா, “பணத்தை தவிர நீ முதலில் சிந்திக்க கற்றுக்கொள் என்றும், ஏன் என் கணவரிடம் மட்டும்தான் பணம் இருக்கிறதா? என்னிடம் இல்லையா?. இனி பேசினால் உன்னை செருப்பால் அடிப்பேன் என்றும், உன்னுடைய எண்ணம் பணத்தில் மட்டும் தான் இருக்கிறது எனவும், உன்னைப் போன்று அனைவரும் இருக்கமாட்டார்கள் என்றும், முதலில் உன்னுடைய குணத்தை மாற்றிக்கொள்” என கேபமாக பதிவு செய்து இருந்தார். அவரது இந்த ரிப்ளை கமெண்ட் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

Anasuya Bharadwaj - updatenews360
Views: - 409

0

0