சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் தொகுப்பாளினிகளும் அதிக அளவு மக்களிடையே பேமஸ் ஆகி வருகின்றனர். அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான். அந்த வரிசையில் தற்போது சைத்ரா ரெட்டியும் இணைந்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து இருந்தார் சைத்ரா ரெட்டி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். ரக்கட் என்ற படத்திலும் நடித்துள்ளார். முக்கிய ரோலில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த சைத்ரா, அஜித்தின் வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சமீபத்தில் தான் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஏற்கனவே ரசிகர் வட்டம் உருவாக்கியிருந்த நிலையில், சமீபமாக இன்ஸ்டாகிராமால் இளசுகளும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் போடும் போஸ்ட்டுகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்.
முன்னதாக, சைத்ரா ரெட்டி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கூடிய சீக்கிரமே 50 மாடுகளை வாங்கி சொந்தப் பண்ணையை ஆரம்பிக்கப் போவதாக கூறி மாட்டிற்கு பால் கரக்கும் வீடியோவை பகிர்ந்து இருந்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், தனிப்பட்ட வாழ்க்கையில் என்னை யாரும் தொல்லை செய்வது கிடையாது. அப்பா, அம்மா, கணவர் யாரும் சரி என்னை என்னுடைய சௌகரியத்தை புரிந்து கொண்டு அவர்களின் வேலைகளையும் பார்த்துக் கொள்வார்கள். அதனால், சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையும் சரியாக கவனம் செலுத்தி வருகிறேன்.
பொதுவாக ரசிகர்கள் எல்லோரும் கேட்பார்கள் குழந்தை எப்போது பெத்துக்க போறீங்க என்று தொகுப்பாளனி கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த சைத்ரா ரெட்டி ஏன்டா கல்யாணம் சீக்கிரமா பண்ணிட்டேன்னு வருத்தப்படுகிறேன். இதுல குழந்தை கொஞ்ச நாள் போகட்டும். படங்கள் எல்லாம் நல்ல பண்ணிட்டு செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார். எப்போதும் என் வீட்டில் நீ இப்படித்தான் இருக்கணும் என்றும், ஆண்களுக்கு எப்போதும் போல் கல்யாணத்திற்கு முன் கல்யாணத்திற்கு பின் எப்படி மாறாததே, அதேபோல் பெண்களும் மாறக்கூடாது என்பது என்னுடைய எண்ணம் என்றும், அதைத்தான் நான் செய்கிறேன். அதைத்தான் என் கணவரும் விரும்புகிறார் என்று சைத்ரா ரெட்டி ஓபன் ஆக பேசியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.