படவாய்ப்பு இல்லாமல் பம்பாய்க்கு சென்று அந்த தொழில் செய்த நடிகை காயத்ரி? அவரே பகிர்ந்த வேதனை!

“18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.

அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார். குறிப்பாக கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்தும் அதன் அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துக்கொண்ட காயத்ரி ஷங்கர், ” நான் படவாய்ப்புகள் இல்லாதிருந்த சமயம் அது…. அப்போது இந்தி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பிற்காக மும்பை சென்றிருந்தேன். அப்போது என்னிடம் பேசிய பெண் ஒருவர் இங்கு ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு தான் கிடைக்கும் என்றார்.

ஆனால், அதற்கு கூட நீங்கள் தகுதியானவராக என்னக்கு தெரியவில்லை என்றார். காரணம் நீங்க ரொம்ப டஸ்கி காலரா இருக்கீங்க. இங்கு நல்ல வெள்ளையாக, மிகவும் அழகாக, கூடுதலான கவர்ச்சியோடு இருப்பவர்களுக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பும் கிடைக்கும் என முகத்தில் அடித்தாற்போன்று சொல்லிவிட்டார். அதன் பின்னர் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். பின்னர் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு எனக்கு உங்கள் படத்தில் வாய்ப்பு கொடுங்கள் என கேட்டு மெயில் செய்தேன்.

அதற்கு உடனே ரிப்ளை செய்த அவர் உங்களின் முந்தைய படங்களின் காட்சிகள் சிலவற்றை அனுப்புங்கள் என கேட்டதும் நானும் அனுப்பினேன். ஆனால் அதன் பின்னர் பதில் வரவில்லை. எனவே அவ்வளவு தான் என நினைத்துக்கொண்டு நான் நம்ம ஊருக்கே திரும்பி வந்துவிட்டேன். அதன்பின்னர் அவ்வப்போது கிடைத்து கிடைத்த தமிழ் படங்களில் நடித்து வந்தேன்.

அப்போது தான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கைக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் பெரிய அளவில் பேசப்பட்டேன். அந்த படத்தை பார்த்து அனுராக் காஷ்யாப் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என கூறினார். தற்போது காயத்ரி ஷங்கர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.