தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர், விஜய், தனுஷ், சூர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சமீப காலமாக படவாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான சோஹைல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெய்பூரில் உள்ள பழமையான அரண்மனையில் இவர்கள் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த கையோடு மும்பையில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்று குடியேறி உள்ளார் ஹன்சிகா. அங்கு நடிகை என்பதை மறந்து குடும்ப வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், நடிகை ஹன்ஷிகா மோத்வானி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் “லவ் ஷாதி டிராமா” என்ற தொடரில் தன்னுடைய சினிமா வழக்கை, காதல், திருமணம் போன்றவற்றை பற்றி பேசியிருந்தார். கடந்த வாரம் கூட தன்னுடைய தோழி கணவரை திருமணம் செய்து கொண்டதாக ஷோசியல் மீடியாவில் எழுந்த புகாரை பற்றி பேசியிருந்தார்.
முன்னதாக ஹன்ஷிகா பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார் அதில் அவருடைய முன்னாள் காதலர் நடிகர் சிம்புவை பிரிந்த பிறகு இரண்டாவது காதல் செய்ய கடினமாக இருந்ததா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹன்ஷிகா “ஆமாம் அதற்கு எனக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. நான் இன்னொருவரை காதலிக்க எனக்கு குறைந்த்து 7 முதல் 8 ஆண்டுகள் வரையில் ஆனது.
நான் காதலை எப்போதுமே நம்புவேன், நான் காதலிக்கும் நபரிடம் அன்பாக இருந்தாலும் அதை நான் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டேன். அதே போல நான் திருமணத்தையும் நம்புகிறேன். உன்மையில் நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்க அதிக நேரம் தேவைப்பட்டது. ஏனென்றால் என்னுடையவராக கடைசி வரையில் என்னுடன் இருப்பவருக்குத் தான் நான் சரி என்று பதிலளிக்க விரும்பினேன். அந்த வகையில் என்னுடைய கணவர் சோஹைல் என்னுடைய காதலின் நம்பிக்கையை அதிகரித்தார், என்று ஹன்ஷிகா கூறினார்.
நடிகர் சிம்புவும், நடிகை ஹன்ஷிகாவும் தொடக்க காலத்தில் உருகி உருகி காதலித்தார்கள் என்று கிசுகிசு கிளம்பியது அனைவருக்கும் தெரியும். ஆனால் சில காரணங்களினால் அவர்கள் இருவரும் பிரிந்ததும் ஊர் அறிந்த விஷயம்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.