“டிராகன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர்தான் கயாது லோஹர். “டிராகன்” திரைப்படத்தில் பல்லவியாக வலம் வந்து ரசிகர்களை சொக்க வைத்த கயாது லோஹர் அதன் பின் டிரெண்டிங் கதாநாயகியாக ஆனார். “டிராகன்” படத்தை தொடர்ந்து “இம்மார்டல்”, “STR 49” ஆகிய திரைப்படங்களில் வரிசையாக ஒப்பந்தமானார். “டிராகன்” திரைப்படத்திற்கு முன்பே ஒப்பந்தமான “இதயம் முரளி” திரைப்படத்தில் இவர் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் கயாது லோஹரின் சம்பளம் குறித்தான ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
“டிராகன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் கயாது லோஹர் அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி தற்போது பிசியாக வலம் வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் ஒன்றரை கோடி சம்பளம் கேட்கிறாராம். “டிராகன்” திரைப்படத்தில் ஒப்பந்தமானபோது அவரது சம்பளம் ரூ.20 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுதான் சரியான தருணம் என தனது சம்பளத்தை ஒன்றரை கோடியாக உயர்த்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தையுடன் தகாத உறவு வைத்திருந்த மருமகனை தாக்கி வற்புறுத்தி திருமணம் செய்ய சொல்லி அடித்து துவைத்த மாமனார் தலைமறைவாகியுள்ளார். பீகார்…
பட்டையை கிளப்பிய முதல் சிங்கிள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14…
தனுஷின் பாலிவுட் அறிமுகம் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் “ராஞ்சனா”. இத்திரைப்படம் தமிழில் “அம்பிகாபதி” என்ற பெயரில்…
கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூர் வந்தடைந்தார். தொடர்ந்து இன்று…
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணத கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை திரைப்பட நடிகை அம்பிகா நேரில் சந்தித்து…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக வலம் வருபவர்தான் யுவன் ஷங்கர் ராஜா. எனினும்…
This website uses cookies.