ஹோம்லியான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தும் மிகச்சிறந்த நடிகையான கயல் ஆனந்தி தற்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் முதன்முதலில் தெலுங்கு சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .
இதுதான் அவரது முதல் திரைப்படம். அதை அடுத்து தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் அவர் 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பொறியாளர் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார் .
மேலும், கயல் திரைப்படத்தின் மூலமாக அவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். ஒட்டுமொத்த சினிமாவும் அவரை திரும்பி பார்த்தது. அந்த அளவுக்கு கயல் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியும் புகழும் தேடி கொடுத்தது.
தொடர்ந்து தமிழில் விசாரணை, சண்டி வீரன், தித்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கயல் ஆனந்தி நடித்திருக்கிறார்.
இதனிடையே கயல் ஆனந்தி சாக்ரடிஸ் என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறார். இந்நிலையில் நடிகை கயல் ஆனந்தி செய்திருக்கும் செயல் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதையும் படியுங்கள்:அரவிந்த் சாமியின் மகனா இது? ஹேண்ட்ஸம் லுக்கில் அழகா இருக்காரேப்பா – ட்ரெண்டாகும் போட்டோஸ்!
அதாவது, கயல் ஆனந்தி தன்னுடைய மகனுக்கு No Caste என்ற சான்றிதழ் வாங்கி இருக்கிறார். இதுகுறித்து பேசி இருக்கும் அவர் இந்த புரிதல் எனக்கு மட்டும் இல்லை என்னுடைய கணவர் வீட்டிலேயும் அனைவருக்கும் இருக்கு என மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.