முதல் கணவரை அழைத்து வந்தது 2-வது கணவருக்கு பிடிக்கவில்லை.. மனம் திறந்த பிரபல நடிகை..!

குட்டி பத்மினி (Kutty Padmini) தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாவார். தமிழகத் திரைப்படத்துறையில் பிரதானமாக பணி புரிந்து வருகிறார். 1959இல் “ஆம்பள அஞ்சுலம்” எனறப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது மூன்றாவது வயதில் தமிழகத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், ம.கோ.இராமச்சந்திரன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரசினிகாந்த், கமல்ஹாசன் உட்பட தமிழ் திரையுலகின் பல முக்கிய நபர்களுடன் நடித்துள்ளார். குழந்தையும் தெய்வமும் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற முதல் பெண் குழந்தை நட்சத்திரக் கலைஞராவார். களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் முதல் முறையாக இவ்விருதினை பெற்றுள்ளார்.

குட்டி பத்மினி, பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள், சகலகலா சம்மந்தி போன்றத் திரைப்படங்களில் துணை நடிகையாகத் தன்னை வளர்த்துக் கொண்டார். இவரது வைஷ்ணவி ஃபிலிம்ஸ் எண்டெர்பிரசைஸ் லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனம் மூலம், “கிருஷ்ணதாசி”, மற்றும் “இராமானுஜர்” போன்ற பல சிறந்த படைப்புகளை தயாரித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராகவும் இருக்கிறார்.

தற்போது, சேனல் ஒன்றுக்கு குட்டி பத்மினி அளித்த பேட்டியில் பல தகவல்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இவர் தனது முதல் கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்து இருந்தார். அதுவும், நிலையாக இல்லை, சில காரணங்களால் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்

இந்நிலையில், இவர் அளித்த பேட்டியில், “தனது முதல் கணவர் குடிபோதைக்கு அடிமை ஆகி, உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், யார் யாருக்கோ உதவுகிறோம், தன்னுடைய முதல் கணவர் நோய் பாதிப்பில் இருக்கும் போது, அவரை எப்படி கவனிக்காமல் இருக்க முடியும்? என்றும், என்ன தான் இருந்தாலும் அவர் தன் முதல் கணவர் எனவும், அவரோடு தான் வாழ்ந்திருக்கிறேன் என்றும், தன் குழந்தைக்கு அவர் அப்பா எனவும், பிரிவு ஒருவரால் வருவதில்லை, இருவரால் வருவது என்கிற பக்குவம் தனக்கு வந்தது என தெரிவித்தார்.

தன் மகள் அமெரிக்காவில் இருந்து போன் செய்தாள் என்றும், ‘அப்பாவிற்கு அடிபட்டு இருக்கார் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்’ என்று கூறியதாகவும், அப்போது அவரை மருத்துவமனையில் சேர்த்தேன் என்றும், அவரை வீட்டில் தங்க வைத்து தன் அலுவலகத்தில் வேலை போட்டு குடுத்தேன் எனவும், செலவுக்கு வேண்டுமே என்பதற்காக மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் கொடுத்ததாகவும், அட்மின் வேலை பார்க்கச் கூறியதாகவும், தினமும் வருவார், தனி கேபின் கொடுத்து இருப்பதாகவும், ஒரு நாய் குட்டிக்கு ரூ.10 ஆயிரம் மாசம் செலவு பண்றோம். ஒரு மனுசனுக்கு செலவு பண்ணக் கூடாதா? என தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், தன்னுடைய இரண்டாவது கணவர் ஒரு நாள் போன் செய்து ‘உன் முதல் கணவர் வந்துட்டார் போல, சந்தோசமா’ என்று கேட்டதாகவும், ‘ஆமாம், உங்களுக்கு அதில் என்ன வயிற்று எரிச்சல்?’ என்று பதிலடி தந்ததாகவும், உடனே அருகில் இருந்த தன் மகள், ‘எப்படி என் அம்மாவிடம் இப்படி கேட்கலாம்’ என, அவருடன் சண்டை போட்தாக அவரது வாழ்க்கை பற்றி வெளிப்படையாக குட்டி பத்மினி பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

36 minutes ago

காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்… எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர் ‘ஸ்வீட்’ குமார் தலைமறைவு!

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…

46 minutes ago

பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…

1 hour ago

முருகர் மாநாட்டுக்கு மனித சங்கிலி நடத்தும் திருமாவளவன் ஏன் வேங்கைவயலுக்கு நடத்தவில்லை? தமிழிசை கேள்வி!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…

1 hour ago

கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…

2 hours ago

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

3 hours ago

This website uses cookies.