சினிமா / TV

மனநல மருத்துவமனையில் மீரா மிதுன்? குற்றப்பிரிவு போலீஸார் சொன்ன அதிர்ச்சி தகவல்!

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு!

கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வீடியோ ஒன்றில் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் நடிகை மீரா மிதுன். இதனை தொடர்ந்து இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியினர் மீரா மிதுன் மீதும் அந்த வீடியோவில் அவருடன் இருந்த சாம் அபிஷேக் என்பவர் மீதும் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் மீரா மிதுனும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

இதனை தொடர்ந்து மீரா மிதுன் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால் கடந்த 2022 ஆம் ஆண்டு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸார் அவரை வலை வீசி தேடி வந்த நிலையில் அவர் டெல்லியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது செய்யப்பட்டார். மேலும் டெல்லியில் உள்ள காப்பகத்தில் அவர் அடைக்கப்பட்டார். 

மனநல மருத்துவமனையில் மீரா மிதுன்?

இந்த நிலையில் மீரா மிதுனின் வழக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் சுதாகர், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் சமர்பித்த அறிக்கையில், “மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரை சென்னைக்கு அழைத்து வர முடியவில்லை. பயணம் செய்யும் அளவுக்கு அவரது உடல் நலம் சீரான பிறகு அவரை சென்னைக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளது நீதிமன்றம். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.