கமலுடன் இதனால் தான் நடிக்கவில்லை – முதன் முறையாக பல ஆண்டு கேள்விக்கு மவுனம் கலைத்த நடிகை நதியா..!

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.

அதுமட்டும் இல்லாமல் 90 காலகட்டத்தில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லித் தான் பொருள் விற்பார்கள். அந்த அளவிற்கு நதியா மிக பிரபலமான நடிகையாக இருந்தார்.

அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர்.

இதனிடையே, நடிகை நதியா முன்னணி நடிகையாக இருந்த போது தமிழில் பல உச்ச நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்தார்.

தமிழில் ரஜினி, விஜயகாந்த், மோகன், பிரபு என்று பல நடிகர்களுடன் நடித்த நதியா, கமலுடன் மட்டும் நடிக்கவே இல்லை. கமல் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்ததை பல ரசிகர்கள் மத்தியில் பயங்கர பேசுபொருள் ஆனது. அப்போது காதல் இளவரசனாக கமல் கொடிகட்டி பறந்தவர்.

கமல் படத்தின் பாடல் காட்சிகளும் காதல் காட்சிகளும் பயங்கர பிரபலம். கமல் திரையில் நெருங்கி உணர்வுபூர்வமாக நடிக்கக் கூடியவர். அதிலும் கமலின் நடிப்பில் வெளிவந்த பாடல்களும், நெருக்கமான கட்சிகளும் இளசுகள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது.

கமல் படம் என்றாலே முத்தம் உறுதி என்ற நிலையில் கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பை உதறினார் நதியா. முத்த பயத்தினால் தான் கமல் உடன் நடிக்க மறுத்ததாக செய்திகள் பரவியது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நதியாவிடம் கமல் படத்தில் ஏன் இதுவரை நடிக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த நதியா ‘கமல்ஹாசனுடன் இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்காதது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

கமலுடன் நடிக்க முடியாமல் போனதற்கு ஒரே காரணம் கால்ஷீட் பிரச்சனை தான். அவர் படத்தில் நடிக்க என்னை அணுகும்போதெல்லாம் நான் வேறொரு படத்தில் கமிட் ஆகியிருப்பேன், ‘விக்ரம்’ படத்தில் முதல் பாகத்தில் நடிக்க வேண்டியது தான் என்றும், ஆனால் அந்த சமயத்தில் தான் நிறைய பாடங்களில் கமிட் ஆகியிருந்தால் தன்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய்விட்டது என்றும் நடிகை நதியா தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

1 day ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

1 day ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

1 day ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

1 day ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

1 day ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

1 day ago

This website uses cookies.