80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.
அதுமட்டும் இல்லாமல் 90 காலகட்டத்தில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லித் தான் பொருள் விற்பார்கள். அந்த அளவிற்கு நதியா மிக பிரபலமான நடிகையாக இருந்தார்.
அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார்.
அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர்.
இதனிடையே, நடிகை நதியா முன்னணி நடிகையாக இருந்த போது தமிழில் பல உச்ச நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்தார்.
தமிழில் ரஜினி, விஜயகாந்த், மோகன், பிரபு என்று பல நடிகர்களுடன் நடித்த நதியா, கமலுடன் மட்டும் நடிக்கவே இல்லை. கமல் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்ததை பல ரசிகர்கள் மத்தியில் பயங்கர பேசுபொருள் ஆனது. அப்போது காதல் இளவரசனாக கமல் கொடிகட்டி பறந்தவர்.
கமல் படத்தின் பாடல் காட்சிகளும் காதல் காட்சிகளும் பயங்கர பிரபலம். கமல் திரையில் நெருங்கி உணர்வுபூர்வமாக நடிக்கக் கூடியவர். அதிலும் கமலின் நடிப்பில் வெளிவந்த பாடல்களும், நெருக்கமான கட்சிகளும் இளசுகள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது.
கமல் படம் என்றாலே முத்தம் உறுதி என்ற நிலையில் கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பை உதறினார் நதியா. முத்த பயத்தினால் தான் கமல் உடன் நடிக்க மறுத்ததாக செய்திகள் பரவியது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நதியாவிடம் கமல் படத்தில் ஏன் இதுவரை நடிக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த நதியா ‘கமல்ஹாசனுடன் இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்காதது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.
கமலுடன் நடிக்க முடியாமல் போனதற்கு ஒரே காரணம் கால்ஷீட் பிரச்சனை தான். அவர் படத்தில் நடிக்க என்னை அணுகும்போதெல்லாம் நான் வேறொரு படத்தில் கமிட் ஆகியிருப்பேன், ‘விக்ரம்’ படத்தில் முதல் பாகத்தில் நடிக்க வேண்டியது தான் என்றும், ஆனால் அந்த சமயத்தில் தான் நிறைய பாடங்களில் கமிட் ஆகியிருந்தால் தன்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய்விட்டது என்றும் நடிகை நதியா தெரிவித்துள்ளார்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.