80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார்.
அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர்.
ஒருமுறை தனது ஸ்வாரஸ்யமான காதல் கதை குறித்து மனம் திறந்து பேசிய நதியா ” நானும் என் கணவரும் சிறுவயது நண்பர்கள். என் பக்கத்துக்கு வீட்டு பையன் தான் அவர். முதலில் நாங்கள் நண்பர்களாக தான் பழகினோம். பின் அது காதலாக மாறியது. நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே அவரை காதலித்தேன். அதன் பின் வாய்ப்பு கிடைத்து நான் நடித்துவந்தேன். அந்த சமயத்தில் அவர் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தார்.
அந்த காலத்தில் போன் கூட இருக்காது. லெட்டர் தான் எல்லாமே. ஒரு முறை அவர் அனுப்பிய லெட்டர் என் அம்மாவிடம் மாட்டிக்கொண்டது. பின்னர் அவர் படித்து வேலை வாங்கட்டும் அப்புறம் பார்ப்போம் என்றார்கள். நான் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோதே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.
என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால் என் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். என் கணவர் நான் சினிமாவில் நடித்துக்கொண்டிருப்பதால் ” உன்னால் குடும்பம் நடத்த முடியுமா? என்று கேட்டார் நானும் முடியும் என உறுதியளித்தேன். எங்களிடம் காசே இல்லாதபோது நாங்கள் திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினோம் என நதியா தனது சுவாரஸ்யமான காதல் கதையை கூறினார்.
இந்நிலையில் நதியா தனது 34வது திருமண நாளை கணவருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட சில பழைய நினைவுகளையும் வெளியிட்டு, “இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அன்பே… இதோ பல தசாப்தங்களாக எங்கள் காதல் மற்றும் சாகசங்கள்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதையடுத்து நதியாவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.