தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் 80 -களில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை நளினி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘ராணுவ வீரன்’ படத்தின் மூலம் நடிகை நளினி தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நளினி, விஜயகாந்துடன் மட்டுமே 17 படங்கள் நடித்துள்ளார்.
1987-ல் நடிகர் ராமராஜனுடன் அவருடன் ஜோடியாக நடித்த நளினியை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு, 13 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நளினி தனது உடல் எடை அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பதை பற்றி தெரிவித்துள்ளார். தான் நடிகையான பின்பு தனது தாய் அவ்வளவு எளிதாக எந்த உணவையும் தனக்கு கொடுக்க மாட்டார் என்றும், மற்றொருவர் சாப்பிடும் போது ஒருவாய் தாங்க என்று கேட்டு வாங்கி சாப்பிடும் நிலையில், தான் அப்போது இருந்ததாகவும், தனது அம்மாவிற்கு இந்த விஷயம் தெரிந்து தன்னை அடி பின்னி எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், சாப்பிடுவதற்காகவே திருமணம் செய்ததாகவும், தனது உடம்பினை அவ்வளவாக பேணி பாதுகாப்பது இல்லை என்றும், நன்றாக நடனமாடும் தான் பியூட்டி பார்லர் கூட அந்த சமயத்தில் செல்வது இல்லை என்றும், மேலும் குண்டாக இருப்பது தனக்கு பிடிக்கும் என்பதால் அதற்காகவே தான் ஸ்டெராய்டு போட்டுக் கொண்டதாகவும், உண்மையை உடைத்துள்ளார்.
மேலும், தனது மகன் தனக்கு பிடித்ததை எல்லாம் சாப்பிட கூறுவான் என்றும் ஆந்திராவில் சென்று சாப்பிட்டது தான் தற்போது பிபி எகிரி விட்டதாகவும், தனது உணவில் அதிகமாக ஊறுகாய் மற்றும் அப்பளம் இல்லாமல் இருக்காது மருத்துவர் உணவில் உப்பை தவிர்க்க கூறிய காரணத்தால் தற்போது அதனை தவிர்த்து வருவதாகவும், திருமணமான புதிதில், நினைத்ததை அதிகமாக சாப்பிட்டதாகவும் அதுவே தற்போது வரை பழக்கமாக தொடர்ந்து வருவதாக நளினி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.