ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் நாட்டிய பேரொளி நடிகை பத்மினி. நடனத்திலும் வசீகர தோற்றத்தினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். குறிப்பாக, கதகளி, குச்சிப்புடி, பரதநாட்டியம், மோகினி ஆட்டம் போன்ற நடன கலைகளை முறையே பயின்று தெரிந்தவர்.
இவரது சகோதரிகள் லலிதா ராகினியும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள் என்றாலும், இவர்களை திருவாங்கூர் சகோதரிகள் என்று அழைப்பார்கள். தனது, 7 வயதில் நாட்டிய அரங்கேற்றம் முடித்த பத்மினி தனது 17 வயதில் கல்பனா என்ற ஹிந்தி படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார். அதன் பின்பு, பல மொழி படங்களில் கொடிகட்டி பறந்தார். தமிழில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்ட பத்மினி 59 படங்கள் சிவாஜியுடன் மட்டுமே சேர்ந்து நடித்துள்ளார்.
இவருடன் சேர்ந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் படம் தற்போது, வரை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. பல விருதுகளைப் பெற்ற இவர் ராமச்சந்திரன் என்ற மருத்துவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனதுடன் அங்கு நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.
இந்த தம்பதிக்கு பிரேம் ஆனந்த் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடிவெடுத்து கடைசியாக பூவே பூச்சூடவா படத்தில் நதியாவிற்கு பாட்டியாக நடித்தார். 2006 ஆம் ஆண்டு மாராடைப்பு காரணமாக உயிரிழந்தார். தற்போது, இவரது மகனின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
முன்னதாக, இவரது மகன் உதயம் பதின்ஜாரு என்ற மலையாள படத்தில் நடித்த நிலையில், முன்னணி நடிகராகவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சினிமா இவருக்கு கை கொடுக்கவில்லை. இதனை அடுத்து, பிரேம் ஆனந்த் உலக புகழ் பெற்ற டைம்ஸ் ஆங்கில பத்திரிக்கையில் பத்திரிகையாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் வேலை பார்த்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.