ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘பொய் சொல்ல போறோம் படம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பியா பாஜ்பாய். இந்த படத்தை தொடர்ந்து ‘கோவா’, ‘கோ’, ‘அபியும் அனுவும்’ போன்ற சில தமிழ் படங்களில் பியா நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் தெரிந்த முக நடிகையாக மாறினார்.
சமீபத்தில் நடிகை பியா பேட்டி ஒன்று கொடுத்தார். அந்தப் பேட்டியில் கடந்த கால வாழ்க்கை குறித்து கண்கலங்கி பகிர்ந்தார். அவர் பேசியதாவது, நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் உள்ளேன். சினிமாவுக்காக நான் வீட்டை விட்டு மும்பை வந்தேன். அப்போது எனக்கு வயது 15 இருக்கும். மும்பைக்கு வந்தபோது எனக்கு தங்க இடமெல்லாம் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்யலாம் என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.
அப்போது, அந்தேரியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் ஒருவர் என்னிடம், நான் நாய் ஒன்றை வளர்க்கிறேன். அந்த நாய் இருக்கும் இடம் மிகச் சிறிய அறைதான். உங்களால் அங்கு தங்கிக்கொள்ள முடியுமா… கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியுமா என்று என்னிடம் கேட்டார். எனக்கு வேறு வழியில்லை. அதனால், நான் அந்த நாயுடன் 9 மாதங்களுக்கும் மேலாக அங்கேயே தங்கினேன் என்று கூறும்போதே கண்கலங்கினார். இப்போது அந்த அறையை விட என் கழிப்பறை கூட பெரியதாகிவிட்டது. ஆனால் எல்லாப் போராட்டத்துக்குப் பிறகும் நிச்சயம் நல்லது நடக்கும் என்றார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…
கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக…
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
This website uses cookies.