தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை.
இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.
மேலும், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார். தற்போது, இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து, சமீபத்தில் டெவில் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த போது நடிகை பூர்ணாவை மிஷ்கின் புகழ்ந்து இருந்தார். பேட்டியில் கலந்து கொண்ட பூர்ணா எனக்கு எப்படி என் அம்மா வாய்த்தாரோ அதேபோல், தான் என் கணவரும் எனக்கு வாய்த்து இருக்கிறார். நான் சமீபத்தில் குழந்தை பெற்ற 15 நாட்களுக்கு பிறகு குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தேன். அப்போது, நான் குண்டாக இருந்ததை பார்த்து பலர் என் உடலை கேலி செய்து பன்னி மாதிரி இருக்கீங்க என்று கமெண்ட் செய்தார்கள். உங்கள் அம்மாவை பாருங்கள் அவரும் இதே மாதிரியான நடைமுறையை கடந்து வந்தவர் தான் என்று பூர்ணா காட்டமாக பதில் அளித்துள்ளார்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.