முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து 2011ம் ஆண்டு லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி என பல திரை பிரபலங்கள் நடித்திருந்தனர்.
காஞ்சனா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் திருநங்கை பிரியா நடித்திருப்பார். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து உள்ளார்.
அதாவது அவர் காஞ்சனா படத்தில் நடித்து மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு தன்னுடைய வாழ்க்கை சாதாரணமாக போய்க்கொண்டு இருந்ததாகவும், ஆனால் காஞ்சனா படத்தின் பின் பலரும் தான் கோடியில் சம்பாதித்து விட்டேன் என நினைத்து வருவதாகவும், அந்த படத்திற்குப் பின் தனக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் லாரன்ஸ் இந்த படத்தின் மூலம் உங்களது வாழ்க்கையில் பல மாற்றங்கள் உருவாகும் என்று கூறியதாகவும், ஆனால் ஒரு மாற்றமும் தற்போது வரை நடக்கவில்லை என்று திருநங்கை பிரியா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.