தமிழ் சினிமாவின் கருப்பு வைரம் என பெண் ரசிகைகளால் அதிகம் விரும்பப்பட்டவர் நடிகர் முரளி. கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான இவர் “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்து பேமஸ் ஆனார்.
இவர் ஷோபா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு அதர்வா, ஆகாஷ், காவ்யா என மூன்று பிள்ளைகள். இதில் அதர்வா பிரபலமான நடிகராக பார்க்கப்படுகிறார். ஆகாஷ் தற்போது புதிய படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். நடிகர் முரளி நடிப்பில் 2002 இல் வெளிவந்த திரைப்படம் சுந்தரா டிரவல்ஸ்.
செந்தில்குமார் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதில் கதாநாயகியாக ராதா நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். இதன் பின்னர் இவர் கேம், அடாவடி, காத்தவராயன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராதா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், தான் சினிமாவிற்கு வந்த போது அட்ஜஸ்ட்மென்ட் அது போன்ற பிரச்சனைகளை வந்ததில்லை எனவும், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடிக்கும் போது தனக்கு 16 வயது தான் அந்த சமயத்தில் முரளி தன்னை ராக்கிங் பண்ணிக் கொண்டே இருந்தார் என்று கூறியுள்ளார்.
மேலும், ” தான் சுந்தரா ட்ராவல்ஸ் படத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் தான் நடித்ததாகவும், 2012 -ம் ஆண்டின் போது தான் ஒருவரை காதலித்து, அவரால் தான் தன்னுடைய வாழ்க்கை மோசமானது. காரணம் தான் அன்புக்கு அடிமை ஆகிவிட்டேன்”.
பின்னர் வழிமாறிப்போன தன்னை தன்னுடைய அம்மா சினிமாவில் கவனம் செலுத்த சொன்னார். தானும் நல்ல பாசிட்டிவ்வான கதாபாத்திரத்தை நோக்கி காத்து கொண்டு இருந்தேன். தற்போது பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வருவதாகவும், இப்போது தான் வாழ்க்கையில் வெளிச்சம் கண்டுள்ளேன் என்று உருக்கமாக ராதா பேசியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.