தமிழ் சினிமாவின் கருப்பு வைரம் என பெண் ரசிகைகளால் அதிகம் விரும்பப்பட்டவர் நடிகர் முரளி. கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான இவர் “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்து பேமஸ் ஆனார்.
இவர் ஷோபா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு அதர்வா, ஆகாஷ், காவ்யா என மூன்று பிள்ளைகள். இதில் அதர்வா பிரபலமான நடிகராக பார்க்கப்படுகிறார். ஆகாஷ் தற்போது புதிய படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். நடிகர் முரளி நடிப்பில் 2002 இல் வெளிவந்த திரைப்படம் சுந்தரா டிரவல்ஸ்.
செந்தில்குமார் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதில் கதாநாயகியாக ராதா நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். இதன் பின்னர் இவர் கேம், அடாவடி, காத்தவராயன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராதா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், தான் சினிமாவிற்கு வந்த போது அட்ஜஸ்ட்மென்ட் அது போன்ற பிரச்சனைகளை வந்ததில்லை எனவும், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடிக்கும் போது தனக்கு 16 வயது தான் அந்த சமயத்தில் முரளி தன்னை ராக்கிங் பண்ணிக் கொண்டே இருந்தார் என்று கூறியுள்ளார்.
மேலும், ” தான் சுந்தரா ட்ராவல்ஸ் படத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் தான் நடித்ததாகவும், 2012 -ம் ஆண்டின் போது தான் ஒருவரை காதலித்து, அவரால் தான் தன்னுடைய வாழ்க்கை மோசமானது. காரணம் தான் அன்புக்கு அடிமை ஆகிவிட்டேன்”.
பின்னர் வழிமாறிப்போன தன்னை தன்னுடைய அம்மா சினிமாவில் கவனம் செலுத்த சொன்னார். தானும் நல்ல பாசிட்டிவ்வான கதாபாத்திரத்தை நோக்கி காத்து கொண்டு இருந்தேன். தற்போது பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வருவதாகவும், இப்போது தான் வாழ்க்கையில் வெளிச்சம் கண்டுள்ளேன் என்று உருக்கமாக ராதா பேசியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.