2000 கால கட்டத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா.தன்னுடைய அழகாலும் கொஞ்சிப் பேசும் மொழியாலும் நிறைய ரசிகர்களை ஈர்த்தவர். சில தினங்களுக்கு முன்பு நடிகை ரம்பா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்று நடிகர் விஜய்யை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் காரணமாக அமைந்ததா? அல்லது சினிமா காரணமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.அது மட்டுமல்லாமல் விஜயின் கடைசிப் படமான 69வது படத்தில் ரம்பா தான் நடிக்க இருக்கிறார் என்றெல்லாம் தமிழ்த்திரை உலகில் பேசப்பட்டது.
இந்நிலையில் நடிகை ரம்பா இந்த சந்திப்பை பற்றி பேசும் போது என்னுடைய குழந்தைகளுக்கு நடிகர் விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள் அதனால் குழந்தைகளுடன் சென்று அவரை சந்தித்தேன் என்றார்.
மேலும் நினைத்தேன் வந்தாய் ஷூட்டிங் நடந்த போது விஜய் அதிகமாக பேச மாட்டார் அமைதியாக இருப்பார்.ஆனால் இப்போது என் குழந்தைகளுடன் நன்றாக பேசி விளையாடினார் என்றார்.நடிக்க வேண்டும் என்ற சூழல் வரும்போது உடன் நடிக்கும் நடிகரைப் பிடிக்க வேண்டும் அந்த கதாபாத்திரத்தை பிடிக்க வேண்டும் அப்படிப்பட்ட வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சொன்னார். ரம்பாவை மீண்டும் சினிமாவில் பார்க்க ரசிகர்கள் இப்போதே ஆவலாய் காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.