பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது வெளிநாட்டு நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை மெஹ்ரீன் ஷா. இவர் இஸ்லமாபாத்தில் நடந்த ஒரு படப்பின் போது இந்திய சினிமா தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தான் டைரக்டர் சையத் எஹ்சான் அலி ஜைதி ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- நான் அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் ராஜ் குப்தாவும், இஷான் அலியுடன் படப்பிடிப்பு தொடர்பாக சென்றிருந்தேன். அங்கு வந்தவுடன் இருவரின் நடத்தையும் முற்றிலும் மாறியது. ராஜ் குப்தாவும், இஷான் அலியுடன் பணிபுரிவது எனக்கு ஒரு கனவாக இருந்தது. அவர்கள் இங்கு வேலை செய்ய வந்தார்களா அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பது கூட எனக்குத் தெரியாது.
இருவரும் மோசமான கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு இணங்க மறுத்ததால் தான் துன்புறுத்தப்பட்டேன். பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் இதையெல்லாம் சொல்வதன் நோக்கம். மற்ற நடிகர்களை எச்சரிக்க விரும்பியதால் இப்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் கோரிக்கையை ஏற்காததால் தண்டனையாக பட்டினி கிடக்க வேண்டியதாக இருந்தது, எனக் கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.