90 காலகட்டங்களில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை ரேகா. இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு படங்களை நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திரைத்துறையில் இருந்து வெளியேறி சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற இவர் தற்போது மீண்டும் கதாநாயகியாக வரவிருக்கிறார்.
தற்போது, அறிமுக இயக்குனர் மாலதி நாராயண இயக்கத்தில் உருவாக்கும் மிரியம்மா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் எழில்துறை, சினேகா குமார், அனிதா சம்பத் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய ரேகா பாரதிராஜா சார் எப்படி கடலோர கவிதைகள் படத்தில் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தாரோ அதேபோல மிரியம்மா படத்தில் ஒரு நல்ல கேரக்டர் எனக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு காரணமான இயக்குனருக்கு மிகவும் நன்றி. முன்பு கதாநாயகனுக்கு சரிசமமாக கதாநாயகி பாத்திரம் இருந்தது. ஆனால், அந்த நிலை மாறி தற்போதைய கதாநாயகிகளுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. 40 வயதான நடிகைகளை கருவேப்பிலை போல தூக்கி போடுறாங்க என தனது ஆதங்கத்தை ரேகா தெரிவித்துள்ளார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.