அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இந்து இந்திய வரலாற்றின் சாதனைகளில் ஒன்றாக முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார்.
பல்வேறு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் கோடானகோடி மக்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். தொடர்ந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோவி திறப்பு குறித்து பதிவிட்டுள்ளார் நடிகை ரேவதி, “ஜெய் ஸ்ரீ ராம்…! இது ஒரு மறக்க முடியாத நாள். ராம் லல்லாவின் வசீகரிக்கும் முகத்தைப் பார்க்கும் போது என்னில் அப்படி உணர்ச்சி ஏற்பட்டது. எனக்குள் ஏதோ ஒரு உணர்வு கிளர்ந்தெழுந்தது.
இதில் விசித்ரமான விஷயம் என்னவென்றால் ஹிந்துக்களாக இருக்கும் நாம் நமது நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்திருக்கிறோம். அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது என நினைத்து நாம் அப்படி செய்கிறோம். மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மீக நம்பிக்கைகளை பர்சனலாக வைத்திருக்க வேண்டும் என்கிற நிலை தான் இருக்கிறது.
ஸ்ரீ ராமரின் வருகை இந்த விஷயத்தை பலரிடம் மாற்றி இருக்கிறது. நாம் ராமரின் பக்தர்கள் என முதல் முறை சத்தமாக சொல்ல இருக்கிறோம். ஜெய் ஸ்ரீ ராம்” என ரேவதி தெரிவித்து இருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ், சும்மா உருட்ட கூடாது. யார் உங்களை இத்தனை நாள் தடுத்தது? என பலர் நடிகை ரேவதியை விமர்சித்து கருத்து கூறி வருகிறார்கள்.
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
This website uses cookies.