தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் மாஸ்கோவில் காவிரி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பாணா காத்தாடி,‘நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
மேலும் இவர் விஜய், சூர்யா, ஜீவா எனப் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து தனக்கென ஒரு இடத்தை பெற்றவர். இவ்வாறாக படங்களில் பிஸியாக நடித்து வந்த சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
கல்யாணம் முடிந்த ஒரு சில மாதங்களில் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். எனினும் அவர்களின் திருமண வாழ்க்கை இறுதியில் விவாகரத்தில் முடிந்து விட்டது. இருப்பினும் சோர்ந்து விடாது மீண்டும் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார்.
புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அந்தவகையில் தமிழ், தெலுங்கு, கனடா போன்ற மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.
கோலிவுட்டில் கலக்கி வந்த சமந்தா தற்போது பாலிவுட்டிலும் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதில் அவரது முதல் அறிமுகமான பாலிவுட் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நடிகை சமந்தாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவரே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மயோசிடிஸ் எனும் தசைகள் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இருப்பினும், பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைவேன் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு இறுதியில் ஐலவ்யூ என பதிவிட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.