தமிழ் மற்றும் மலையாளத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தபடியாக கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் ஷகிலா. இவர் ஆபாச படங்களிலும் நடித்து 80ஸ் மற்றும் 90ஸ்களின் கனவு கண்ணியாக உலா வந்தவர். ஆரம்பத்தில் தமிழில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஷகிலா, குடும்ப சூழ்நிலை காரணமாக மலையாளத்தில் ஆபாச படங்களில் நடித்து வந்தார்.
தமிழகம், கேரளாவில் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கவர்ச்சி நடிகையாக இருந்த இவரின் தோற்றத்தை பிரபல தனியார் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாற்றியது. அனைவரும் ஷகிலாவை அம்மா என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
குக் வித் கோமாளியின் 2வது சீசனில் 2வது இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஷகிலாவுக்கு மீண்டும் மவுசு எகிறியது. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்த நிலையில், பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு ஷகிலா பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் தனது வாழ்க்கையில் நடைபெற்ற சில விஷயங்களை கூறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அவர் பேசியதாவது :- என்னை சகிலாவாக பார்த்ததுக்கும், அம்மாவாக இப்போ பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. தற்போதைய சூழல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. கேரளாவில் என்னுடைய படங்கள் வெளியானதால் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போய்விட்டது. எனது படங்களில் பிட்டு போட்டு ஓட்டி ரிலீஸ் பண்றாங்க என்பதை கேட்டபோது எனக்கு வருத்தமாக இருந்தது.
நான் நடித்த 23 படங்களுக்கு சென்சார் கொடுக்காமல் வைத்திருந்தார்கள். நான் மும்முட்டி, மோகன்லால் ரசிகை. அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால், அவர்கள்தான் எனது படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்தனர். இது கூட நான் கேள்விபட்டதுதான். உண்மையா..? எனத் தெரியவில்லை.
அவர்கள் 5 கோடி செலவழித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் பத்து லட்சத்தில் படம் எடுக்கிறோம். 10 லட்சம் ரூபாய் பணம் 4 கோடி படத்தை காலி பண்ணால் கோபம் வர தானே செய்யும். அப்படித்தான் என் மீது வருத்தம் இருந்திருக்கும். அவர்கள் என்னை தடை செய்ய நினைத்தபோது நானே என் நடிப்பை தடை செய்து விட்டேன்.
21 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி இருந்தேன். அதன் பின் 2001 முதல் ஆபாச படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்தேன். இதனால், கொடுத்த அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டேன். 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், இன்னும் அதே சக்கிலாவாக தான் சிலர் பார்க்கிறார்கள், எனக் கூறினார்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.