தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார்.
“என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.
அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதையும் தாண்டி அவர் தொடர்ந்து பெரிய நடிகர் என்ற அந்தஸ்தில் தான் இருந்து வருகிறார்.
இந்நிலையில் வடிவேலு உடன் நடித்து சினிமா கெரியரையே வீணடித்துக்கொண்ட நடிகை குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரேயா சரண் வடிவேலு உடன் சேர்ந்து இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்ற திரைப்படத்தில் நடித்து அவருடன் டூயட் ஆடியிருப்பார். அந்த படத்தில் தனக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் தான் வேண்டும் என இயக்குனரிடம் அடம்பிடித்து கேட்டாராம் வடிவேலு. ஆனால், ஸ்ரேயா சரண் அந்த படத்தில் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டார்.
ஆம், அதன் பின் படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். கிடைத்த ஒரு சில வாய்ப்புகளும் அந்த படத்தின் ஹீரோக்கள் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த அந்த ஹீரோயின் வேண்டாம் மவுஸ் இருக்காது என கூறி பல பேர் ஸ்ரேயா சரணை நிராகரித்து விட்டார்களாம். இதனால் ஒரு கட்டத்தில் ஸ்ரேயா சரண் அட்ரெஸே இல்லாமல் வெளிநாட்டு காதலரை ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
This website uses cookies.