முதல் புருஷன் நல்லவர் தான்…. ஆனால் – மறுமணம் பற்றி மனம் திறந்த சீரியல் நடிகை!

நாதஸ்வரம் சீரியலில் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல ஒரு பெயரை சம்பாதித்தவர் தான் நடிகை ஸ்ரீதிகா. மலேசியாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து இங்கு சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக இடத்தைப் பிடித்தார் .

பார்ப்பதற்கு ஹோம்லியாக மிகவும் பவ்யமான தோற்றத்தில் இருந்த ஸ்ரீதிகாவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இவர் மகராசி சீரியலில் தன்னோடு நடித்து வந்த நடிகர் ஆர்யன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஆரியனுக்கும் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் முதல் கணவரை ஏன் பிரிந்தேன்? விவாகரத்து செய்வதற்கான காரணம் என்ன? என்பது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது, “என்னுடைய முதல் கணவர் மிகவும் நல்ல மனிதர் தான். அவர் மீது எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்குள் எங்கள் இருவருக்கும் அந்த வாழ்க்கை சரிவர அமையவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. அது போக போக சரியாகிவிடும் என்று நாங்கள் இருவரும் நினைத்தோம். ஆனால், போகப் போக பிரச்சனை அதிகமாகி கொண்டுதான் இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் இதற்கு மேல் இந்த வாழ்க்கையை தொடர முடியாது என நாங்கள் இருவருமே சமரசமாக பேசி அந்த வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டோம்.

எங்களுக்கு ஒன்றும் சிறுவயதில் திருமணம் ஆகவில்லை. நல்ல மெச்சியூர் ஆன 30 வயசில் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனால், எனக்கு அந்த திருமண வாழ்க்கை நான் நினைத்தது போல் அமையாதுதால் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அதற்கான மிக முக்கிய காரணம், “இயற்கையான குணத்துடன் ஒருவர் இருக்க வேண்டும். நமக்காக அவர்களை மாற்றிக்கொள்ள ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது.

அப்படிப்பட்ட நபர்களோடு தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கிட்டத்தட்ட எனக்கு ஏற்பட்டது போலவே பிரச்சனை தான் ஆரியனுக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்டது. இதனால் முதல் மனைவியை பிரிந்த ஆரியன் என்னை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என ஸ்ரீதிகா கூறினார்.

Anitha

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

3 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

4 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

4 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

5 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

6 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

6 hours ago

This website uses cookies.