தான் இறந்துவிடுவோம் என தெரிந்தும் கமல்ஹாசனை துரத்தி காதலித்த பிரபல நடிகை மரணப் படுக்கையில் கமலை மட்டும் சந்தித்துள்ளார்.
கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ” சொல்லத்தான் நினைக்கிறேன்”. 1973ல் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான செல்லுலாய்டில் பூத்த கிளாசிக் காதல்.
அதன் பின் 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படம் கமல்- ஸ்ரீவித்யாவின் நட்பை உறுதிசெய்த திரைப்படம். இருவருக்குமான ஜோடி திரைப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
இருவரும் அப்போது முதலே நல்ல நட்பாகி பழகி வந்துள்ளனர். இதில் ஒரு தலை காதலாக மாறியது ஸ்ரீவித்யாவுக்கு. ஆனால் வாணியுடன் கமலுக்கு திருமணம் நடைபெறுகிறது.
அதன்பின் எட்டு வருடங்கள் கழித்து 1986 ல் புன்னகை மன்னன் படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தில் பத்மினியாக வரும் ஸ்ரீவித்யா, சாப்ளின் செல்லப்பாவாக வரும் கமல்ஹாசனுடன் நட்பையும் நடிப்பையும் மீண்டும் உறுதிசெய்கிறார்.
தொடர்ந்து 1989 ல் அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், நம்மவர், கடைசியாக காதலா காதலா என்று அவருக்கும் கமலுக்குமான படங்கள் இருக்கின்றன.
தொடர்ந்து சில படங்கள், மீண்டும் கேரளாவிற்கே திரும்புகிறார் ஸ்ரீவித்யா. நோயால் அவதிப்படும் ஸ்ரீவித்யாவின் கடைசி நாட்களில் மிகவும் கஷ்டப்பட்டார்.
கடைசி காலத்தில் மரண படுக்கையில் இருந்த ஸ்ரீவித்யா, தான் கமலை மட்டும் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அவரது கடைசி ஆசையை கமல் நிறைவேற்றியுள்ளார்.
ஸ்ரீவித்யா தனது சொத்துக்களை ஏழை எளிய குழந்தைகளுக்கு எழுதி வைத்துள்ளார். மேலும் இவர் மறைந்த பழம்பெரும் பின்னணி பாடகி எம்எல் வசந்தகுமாரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஸ்ரீவித்யாவின் அண்ணி அவரைப் பற்றிய ஒரு சில விஷயங்களை தற்போது, இணையதளத்தில் பேட்டி வாயிலாக தெரிவித்து வருகிறார். அதாவது, ஸ்ரீவித்யா தனது பெற்றோர்களை எதிர்த்து ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டாராம். ஆனால், அவரும் ஸ்ரீவித்யாவை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் நடிக்க கட்டாயப்படுத்தி இருக்கிறார். மேலும், திருமணத்திற்கு பின் படங்களில் நடித்தாராம். இதோடு மூன்று முறை தனது கணவரால் கருக்கலைப்பு செய்து கொண்டுள்ளதாக ஸ்ரீவித்யாவின் அண்ணி தற்போது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.