கொஞ்ச நாள்’ல டைவர்ஸ் வாங்கிட்டேன்.. அது என் பொண்ணு இல்ல.. வருத்தப்படும் நடிகை சுகன்யா..!

பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து 90களில் முன்னணி பிரபல நடிகையாக சுகன்யா வலம் வந்தவர். நடிகை சுகன்யா 1992 -ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் வெளியான “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை சுகன்யா ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை 2002 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.

இதனிடையே, திருமணத்திற்கு பின் சுகன்யா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிகை சுகன்யா நடித்துள்ளார். ஆனால், கணவருக்கோ சுகன்யா நடிப்பது பிடிக்கவில்லை என்பதால், திரைப்படம் மற்றும் டிவியில் நடிக்கக்கூடாது என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை போட்டது மட்டும் இல்லாமல், எக்குத்தப்பான சில கேள்விகளையும் கேட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுகன்யா அவரை விவாகரத்து செய்துள்ளார்.

மேலும் படிக்க: இதுக்கு இல்லையா சார் ஒரு END?.. பெரிய இடத்து பெண்ணுடன் சிம்புவுக்கு விரைவில் திருமணம்..!

இந்த கசப்பான நிகழ்வுகளுக்கு பிறகு நடிகை சுகன்யா இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்காமல் தனியாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சுகன்யா மீண்டும் சினிமாவில் ஒரு வலம் வர இருக்கிறார். ஆனால், இந்த முறை நாயகியாக இல்லை. பாடலாசிரியராக தான் மலையாளத்தில் தமிழ் காட்சிகளில் வரும் நிலையில் இயக்குனர் சுரேஷ்பாபு என்பவரும் இசையமைப்பாளர் சரத் என்பவரும், சுகன்யா தான் பாடல் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் ஒரு பாடலை எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மகளுடன் சுகன்யா வசித்து வருவதாகவும், தன் மகளை மீடியாவில் இருந்து தள்ளி வைத்து இருப்பதாகவும், தகவல்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால் சுகன்யாவுடன் புகைப்படத்தில் இருப்பவர் தன்னுடைய மகள் இல்லை என்றும், அவர் தன்னுடைய அக்காவின் மகள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: ஏமாற்றி சொகுசு வாழக்கை வாழ்ந்த சைந்தவி?.. ஜீவனாம்சமாக கொட்டிக் கொடுத்த GV.. சர்ச்சையை கிளப்பும் பிரபலம்..!

தன்னுடைய டிவிட்டரில், அவர் புகைப்படத்தை பகிர்ந்ததாக சுட்டிக்காட்டிய சுகன்யா இணையதளத்தில் அது பெரிய அளவில் வைரல் ஆகிவிட்டது. ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து, ஒரு வருடங்களுக்குள் தான் விவகாரத்தை கேட்டு கோர்ட்டில் அப்ளே செய்ததாக கூறிய அவர், ஆனால் விவகாரத்துக்கு கிடைக்கவில்லை என்பதால் சில வருடங்கள் ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். வேண்டும் என்றே ஏதாவது செய்திகளை பரப்ப வேண்டும் என்ற காரணத்திற்காக இப்படி செய்கிறார்கள் என்று சுகன்யா விளக்கம் அளித்துள்ளார். அக்கா மகள் கூட இச்செய்தியை பார்த்து சித்தியால் நானும் பிரபலமாகி விட்டேன் என்று கிண்டல் செய்தாராம்.

Poorni

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

5 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

6 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

6 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

7 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

8 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

8 hours ago

This website uses cookies.