சினிமா / TV

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் வெற்றி பெற்ற நடிகையாக வலம் வந்துள்ளார்.

இதையும் படியுங்க: முடியல..கெஞ்சி கேக்குற விடுங்க…வைரலாகும் தமன்னா வீடியோ.!

இவருடைய திறமையான நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.மேலும், ‘இந்திரா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராகவும் முத்திரை பதித்தார்.

சுஹாசினி,தனது கணவர் மணிரத்னத்துடன் சேர்ந்து ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.இதற்காகவே பல தரமான சினிமாக்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.அதுமட்டுமன்றி, ‘நாம் அறக்கட்டளை’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம்,ஆதரவற்ற பெண்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில்,சமீபத்தில் நடிகை சுஹாசினி,தனது உடல்நிலை குறித்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.அவருடைய சொற்பொழிவின் போது “நான் ஆறுவயதில் இருந்தே டி.பி (காசநோய்) பாதிப்பு அடைந்தேன்.

சிறிய பருவத்திலேயே இதற்கான சிகிச்சை எடுத்ததால் எல்லாம் சரியாகி விட்டது. ஆனால் 36 வயதில் மீண்டும் அதே நோய் வந்துவிட்டது. இதனால் என் உடல் எடை திடீரென அதிகரிக்க ஆரம்பித்தது. மேலும், இந்த நோய் என் கேட்கும் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தியது” என்று கூறினார்.

இதையடுத்து சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு எந்நேரமும் மன உறுதியுடன் இருந்ததன் காரணமாக தற்போது முழுமையாக குணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.தான் இந்த வியாதியை எல்லோரிடமும் பகிர்வதை,முதலில் வெட்கமாக நினைத்தாலும்,இன்று இதை வெளிப்படையாக கூறுவது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே என தெரிவித்துள்ளார்.

Mariselvan

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

4 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

5 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

6 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

6 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

7 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

8 hours ago

This website uses cookies.