‘தெறி படத்துல அந்த ஒரு சீன்’ல ஏன் நடிச்சீங்க?’ காரணம் இதுதான்: சுனைனா Open Talk..!

கடந்த 2008ம் ஆண்டு தமிழில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தில் நகுல் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சுனைனா. அதன்பின்னர், வம்சம், மாசிலாமணி, நீர்ப்பறவை, சமர், வனம், தெறி, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் சுனைனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் விஷாலுடன் சுனைனா நடித்திருந்த லத்தி திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இந்நிலையில், பிரபல ஆன்லைன் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சுனைனா, சினிமா வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதை குறித்து மிகவும் ஜாலியாக பல்வேறு விஷயங்களை பற்றி பேசியுள்ளார். அப்போது, தெறி படத்தில் சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் ஏன் நடித்தார் என்பது குறித்தும் சுனைனா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, ராதிகா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தெறி.

பேட்டியில் தெறி படத்தில் அந்த சில நிமிட காட்சிகளில் மட்டும் சுனைனா நடித்தது குறித்து சுனைனாவிடம் “இவங்க நல்ல ஹீரோயினா நடிச்சுட்டு வந்தாங்க. எதுக்கு அவங்க தெறி-ல நடிக்கணும். அப்ப உங்கள எல்லாருமே அவங்க வந்து ஒரு சீன்ல நடிப்பாங்க, ஒரு சாங் நடிப்பாங்க. அப்படி எல்லாம் அப்ரோச் பண்ணுவாங்க. தெறி -ல நடிச்சுருக்க கூடாதுன்னு தோணலயா” என கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சுனைனா, “எனக்கு கட் ஃபீலிங் என்ன சொல்லுதோ அதுதான் நான் பண்ணுவேன். எல்லாருக்குமே நாம என்ன பண்ணனும்ன்னு சுயமான ஒரு முடிவு இருக்கும். உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை நீங்க செய்வீங்க. அந்த சமயத்துல என்ன தோணுதோ, அதை பண்ணுவீங்க. தெறி படத்துல நான் ரொம்ப விரும்பி தான் பண்ணுனேன். ஆனால், நான் பண்ண வேணாம்ன்னு நடிக்க மறுத்த படங்கள் ஒரு லிஸ்ட்டே இருக்கு” என சுனைனா ஜாலியாக கூறியுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.