தமிழில் “வைகை” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சுவாசிகா. அதனை தொடர்ந்து மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்த அவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். இதனிடையே தமிழில், “கோரிப்பாளையம்”, “மைதானம்”, “சாட்டை”, “அப்புச்சி கிராமம்” போன்ற திரைப்படங்களில் நடித்த சுவாசிகா, “லப்பர் பந்து” திரைப்படத்தின் மூலம் மனம் கவர்ந்த நடிகையாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து “ரெட்ரோ”, “மாமன்” போன்ற திரைப்படங்களில் நடித்த அவர், சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சுவாசிகாவிடம் சினிமாவில் நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்….
“நான் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். நான் அப்படி ஒரு பிரச்சனையை சந்தித்தது இல்லை. ஆனால் சினிமாவில் மட்டுமல்ல, பல துறைகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. வேலைக்கு செல்லாத பெண்களுக்கும் கூட இந்த பிரச்சனை உள்ளது. சிறுமிகளுக்கு கூட இங்கே பாதுகாப்பு இல்லை.
பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் தைரியமாக இருக்க வேண்டும். ஒருவர் நம்மிடம் தவறாக நடக்க முயற்சித்தால் அதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், அவர்களை சமூகத்தின் முன் நிறுத்தவும் தயங்கக்கூடாது” என சுவாசிகா பதிலளித்துள்ளார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.