சினிமாவில் காதலிக்கும் பிரபலங்கள் ஒரு சிலர்தான் வாழ்க்கையில் இணைகின்றனர். அப்படி இணைந்தவர்கள் கூட விவாகரத்து வளையத்திற்குள் சிக்கி தவித்து வருகின்றனர்.
அப்படித்தான் நடிகை தமன்னா தான் உண்டு தன் வேலையுண்டு என படு பிஸியாக பாலிவுட், கோலிவுட், டோலிவுட்டில் நடித்து வந்தார். எந்த சர்ச்சையிலும் சிக்காத நடிகையாக வந்த தமன்னா, இடையில் விஜய் வர்மாவை காதலிப்பதாக அறிவித்தார்.
விஜய் வர்மாவும், தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இருவரும் அவரவர் வேலை பார்த்து வரும் நிலையில், விஜய் வர்மாவை தமன்னா பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதையும் படியுங்க: யாரு சொன்னா அப்டினு.. அஜித்துக்கு போன் போட்ட விஜய்.. காரணம் என்ன தெரியுமா?
Lust Stories 2 படத்தில் தமன்னா நடித்த போது உடன் நடித்த விஜய் வர்மாவிடம் செம செக்ஸியாக நடித்திருந்தார். அப்போது இந்த டிரெய்லர் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
யாருடனும் இப்படி நெருக்கமாக நடிக்க மாட்டீர்களே, இந்த படத்தில் மட்டும் ஏன் என செய்தியாளர்கள் கேட்ட போது, பட்டென எனது வருங்கால கணவருடன் தான் நடிக்கிறேன் என தைரியமாக கூறினார்.
ஆனால் இருவரும் பிரிந்துள்ளது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவர்கள் பிரிந்ததற்கு காரணம், தமன்னா போட்ட பதிவு தான் என கூறப்படுகிறது.
அந்த பதிவில், காதலை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, எதிரில் உள்ளவர்களுக்கு ரகசிய ஆர்வத்தைக் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவர் உங்களை அழகாகப் பார்க்க வேண்டுமென்றால், முதலில் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அழகாகப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள் என அவர் காட்டமாக பதிவு போட்டார்.
இது அவரது காதலரை கடுமையாக திட்டுவது போன்று உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர். சரி சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்ற ரசிகர்கள் புலம்பியே சென்றனர்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.