சினிமா / TV

மதுபான ஊழல் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா? அதிர்ச்சியில் திரையுலகம்…

டாப் நடிகை

தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வருபவர்தான் தமன்னா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் இவர் தற்போது ஹிந்தியில் “ரோமியோ”, “ரேஞ்சர்”, “ஐபிஎஸ் மரியா”, “வ்வான்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இதனிடையே நடிகை தமன்னா “Wite & Gold” என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மதுபான ஊழலில் நடந்த மோசடி பணத்தின் மூலம் தனது நிறுவனத்திற்காக தமன்னா 300 கிலோ தங்கம் வாங்கியுள்ளதாக ஒரு புகார் எழுந்துள்ளது. 

விசாரணை வளையத்தில் தமன்னா

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 முதல் 2024 வரை ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் மதுபான விற்பனையில் ரூ.3500 கோடி ஊழல் நடந்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் உட்பட 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 

இந்த 11 பேரில் ஆந்திராவின் முன்னாள் எம் எல் ஏ பாஸ்கர் ரெட்டியும் அவரது உதவியாளர் வெங்கடேஷ் நாயுடுவும் அடங்கும். இந்த நிலையில் வெங்கடேஷ் நாயுடுவுடன் தமன்னா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலான நிலையில் இந்த மதுபான மோசடி விவகாரத்தில் தமன்னாவின் பெயரும் அடிபட்டுள்ளது. அதாவது இந்த மோசடி பணத்தின் மூலம் தமன்னாவுக்கு சொந்தமான  “Wite & Gold” நிறுவனம் 300 கிலோ தங்கம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமன்னாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.