தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான திரிஷா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகை ஆவதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு “மிஸ் சென்னை” போட்டியில் பட்டம் பெற்றிருக்கிறார். அதன் பிறகு திரிஷாவுக்கு திரைப்படங்களில் இருந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்க துவங்கியது.
ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் ஏற்று திரிஷா நடித்திருந்தார். அதை அடுத்து மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி, ஆயுத எழுத்து, ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் திரிஷா.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரம் நடித்து எல்லோரும். ரசனைக்கும் உள்ளாகி இருந்தார். இதனிடையே பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் திரிஷாவின் அழகின் ரகசியம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி பெண்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
41 வயதாகும் திரிஷா இதுநாள் வரை இளமை குறையாமல் எவர்க்ரீன் அழகியாக வலம் வந்து கொண்டிருப்பதன் ரகசியம் என்னவென்று கேட்டீர்களானால் நடிகை திரிஷா தினமும் டயட் மற்றும் வொர்க் அவுட்டை தவறாமல் கடைபிடிப்பவர். மேலும் திரிஷா சிறுவயதிலிருந்தே அசைவ உணவுகளை அறவே தவிர்த்து வந்தாராம் .
அதிக காய்கறிகளை தன் உணவில் சேர்த்துக் கொள்வார். பொதுவெளியில் எங்குமே சாப்பிட மாட்டாராம் தன்னுடைய அம்மாவின் கைகளால் சமைக்கப்படும் உணவு மட்டுமே த்ரிஷா அதிகம் சாப்பிடுவார். மேலும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் தன்னுடைய சருமங்களை பாதுகாக்கவும் எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவே கூடாது என்பதில் கவனமாக இருப்பாராம்.
மேலும், மன அமைதிக்காக திரிஷா யோகா மற்றும் மெடிடேஷன் போன்றவற்றில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இத்துடன் முகம் பொலிவுடன் அழகாக இருப்பதற்காக விட்டமின் சி நிறைந்த பழங்களை ஜூஸாகவோ அல்லது பழங்களாகவோ எடுத்துக் கொள்வாராம். இதுதான் திரிஷா அழகன் ரகசியம் என கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.