“ பாவாடை தாவணியில் … எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல..” – VJ தீபிகா !!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம், தமிழகமெங்கும் பிரபலமானவர் விஜே தீபிகா. இதில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவாக, சீரியலில் குறுகிய காலமே நடித்தாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு முகப்பரு சிகிச்சைக்காக தீபிகா, சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார்.

தீபிகா ஒருமுறை பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது ஆங்கரிங் பயணம், சீரியல், வெற்றி தோல்வி, குடும்பம் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். வீடியோவில் தீபிகா பேசுகையில்; நான் வீட்டுல மூனாவது பொண்ணு. எனக்கும், அக்காவுக்கும் கிட்டத்தட்ட 10 வயசு வித்தியாசம். என் அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் 60 வயசு மேல ஆகுது. நான் மீடியாவுக்கு வர்றதுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே ரொம்ப பயந்தாங்க. சொந்தகாரங்க திட்டும்போது ரொம்ப வருத்தப்படுவாங்க.

எந்தவொரு ஃபங்ஷனுக்கு போனாலும், ஏதாவது ஒன்னு கேட்டு அம்மாவ அழ வச்சுடுவாங்க. அம்மா அழுதுட்டே வந்து புலம்புவாங்க. இப்போவே நிறைய பேரு நீ படிச்சிருக்க.. உனக்கு வீடு, குடும்பம் பாக்கணும்னா, நீ படிச்ச வேலைக்கு போலாமே. ஏன் இதை பண்றனு கேட்பாங்க. ஆனா, இது என்னோட ஆசை. அதேநேரத்துல நான் இதுக்காக ஓடுறேன்னு என் அம்மா, அப்பாவையும் விட முடியாது. ரெண்டையுமே பேலன்ஸ் பண்ணனும்.

மீடியாவுக்கு வந்த புதுசுல நிறைய பொய் சொல்லிருக்கேன். நான் சென்னையில ஹாஸ்டல்ல இருந்தேன். என் அம்மா, அப்பா ஊருல இருப்பாங்க. அப்போ லோக்கல் சேனல்ல வேலைப் பாத்தேன். என்னோடது லைவ் ஷோ. நைட் 7-8 வரை ஆஃபிசுல இருக்கணும். அப்புறம்தான் ஹாஸ்டல் வரமுடியும். என்னோட ஸ்டுடியோ தேனாம்பேட்டையில இருக்கும். நான் சூளைமேட்டுல ஹாஸ்டல்ல இருந்தேன். வேலை முடிச்சு, ஹாஸ்டல் வரதுக்கு நைட் 9.30 ஆயிடும். ஆனா நான் வீட்டுல 7 மணிக்கே ஹாஸ்டல் வந்ததா சொல்லிருவேன். என் அம்மா, அப்பா ரொம்ப வெள்ளந்தி. நான் என்ன சொன்னாலும் நம்பிருவாங்க.

ஊருல இருக்கும்போது, சாயங்காலம் 6 மணிக்கு மேல வெளியே போகக் கூடாதுனு சொல்லுவாங்க. ஆனா, நான் 10 மணிக்குத்தான் ஹாஸ்டலுக்கு வருவேன். அதுவும் சென்னை புது இடங்கிறதால ரொம்ப பயப்படுவாங்க. என் அம்மா, அப்பாவ கஷ்டப்படுத்தனும், அவங்கள ஏமாத்தனும் எண்ணமெல்லாம் என் மனசுல கிடையாது.

நான் ஆடிஷன் போறதெல்லாம் சொல்லமாட்டேன். ஆனா கிடைச்சதுக்கு அப்புறம், சும்மா காலேஜ் போயிட்டு இருந்தேன்மா, ஸ்டேஜ்ல பேசுறது பாத்துட்டு அவங்களா கூப்பிட்டாங்க. என் ஃபிரென்ட் ஆடிஷன் போனா. நான் அவக்கூட சும்மா துணைக்கு போனேன். என்னையும் ஆடிஷன் கொடுக்க சொன்னாங்க. செலெக்ட் ஆகிட்டேன். இப்படித்தான் சொல்லுவேன். நான் தேடி அலையிறேனு எதுவுமே சொல்லமாட்டேன் என தெரிவித்தார்.

தற்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.”இந்த பொன்ன புடிக்கலனு சொன்னவன் எல்லாம் Line-ல வா..?”என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.