தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.
அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார்.
காரணம் பிள்ளைகளின் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் தான் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஜோதிகா மும்பையில் ஆஃப் பேண்ட் அணிந்து அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், ஜோதிகா பாலிவுட் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தலைகீழாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். இதற்கு சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், ஜோதிகா கொடிக்கட்டி பறந்த காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து வந்தார். அவருக்கு நடிகை ரம்பா டஃப் கொடுக்கும் விதத்தில் இருந்தவர். அப்போது தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த ரம்பா சகோதரரை வைத்து 3 ரோசஸ் என்ற படத்தினை தயாரித்து அந்த படத்தில் ஜோதிகா, ரம்பா, லைலா இணைந்து நடித்து இருந்தனர்.
பின்னர் பைனான்சியரிடமிருந்து கடன் வாங்கி அந்த படத்தினை தயாரித்த ரம்பா, படத்தை முடிக்க 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிய நிலையில், அதற்கு காரணம் 2002 ஆம் ஆண்டு ஜோதிகாவுக்கும் லைலாவுக்கும் இடையில் சண்டை வந்து ஷூட்டிங்கிற்கு வராமல் இழுத்தடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குறித்த நாளில் படத்தினை முடிக்காமல் போக, அதையெல்லாம் சரி செய்து ரம்பா படத்தை முடித்து ரிலீஸ் செய்து இருக்கிறார். ஆனால் படமும் சரியாக ஓடாமல் மோசமான நஷ்டத்தை ரம்பாவிற்கு கொடுத்து கடனாளியானார்.
அப்போது இருந்து ரம்பா தமிழில் தலையே காட்டாமல் வேறு மொழிகளில் நடித்தும் 2010ல் திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகி இருக்கிறார். 3 ரோசஸ் படத்தின் போது லைலா பிதாமகன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தும் வந்து இருக்கிறார். இதனிடையே, சூர்யாவை காதலித்து வந்த சமயத்தில் லைலாவுடன் ஜோதிகா சண்டைப் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.